செவ்வாய், 23 ஜூலை, 2013

போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்கள்

போர் முறைகளில் தமிழர்கள் உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்கினார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்,சங்க காலத்தில் போர்களுக்கு போகும் போது வீரர்கள் சூடிய மலர்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி ; உட்காது
எதிர்ஊன்றல் காஞ்சி ; எயில்காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை - அதிரப்
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம் - புறநானூறு (9)


வெட்சி பூ (நிறை கவர்தலின் போது சூடும் பூ) அதாவது சங்க காலத்தில் எதிரி நாட்டுடன் போர் புரிய விரும்புவதை சூசகமாக தெரிவிக்க அந்த நாட்டு பசுக்களை கவர்ந்து வருவர், அப்போது வெட்சி பூவை சூடிச்செல்வர்.


கரந்தை பூ - அப்படி எதிரி நாட்டவர் வந்து கவர்ந்து செல்ல முயலும் போது அதை தடுக்க வரும் வீரர்கள் அணிந்திருக்கும் பூவின் பெயர்.


வஞ்சி - எதிரி நாட்டு படையை முற்றுகையிடும் போது சூடப்படும் பூ.



காஞ்சி - போர் நடக்கும் போது போரில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை காப்பவர்கள் அணிவது.



உழிஞ்சை பூ- எதிரியின் கோட்டையை தகர்க்கும் போது அணிவது.

உழிஞ்சை பூவின் படம் கிடைக்கவில்லை.

நொச்சி - கோட்டையை தகர்க்க வருபவர்களுடன்,போரிடுபவர்கள் அணிவது.



தும்பை - போர் மிக உக்கிரமாக நடப்பதை குறிக்கும் மலர்.



வாகை - வெற்றி பெற்றதை குறிக்கும் மலர்.



பாடாண் - அரசனின் வெற்றியை போற்றி பாடி பரிசில் பெற புலவர்கள் வரும்போது சூடும் மலர்.


நன்றி: விக்கிபீடியா, http://www.flowersofindia.net/, Flickr

1 கருத்து:

  1. நச்சென்று சில பழந்தமிழ் மலர்கள் ! பலரும் பார்க்கவேண்டும் !

    பதிலளிநீக்கு