திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மகா சதாசிவமூர்த்தி

 
மதுரை கோவில் கோபுரச்சிற்பம் 

மகா சதாசிவமூர்த்தி
பக என்றால் நிகரற்றவன் என்று பெருளாகும். எனவேதான் இறைவனை பகவான் என்று கூறுவார்கள். பிரம்மங்கள் எத்தனை என்று எண்ணிக்கையில் கூற முடியாது என்பார்கள். எனினும் சிவனுக்கு பஞ்சபிரம்மன் என்ற சதாசிவ நாமம் உண்டு. அந்த சதாசிவத்திலும் 25 முகங்கள் கொண்ட மஹாசதாசிவரூபம் உண்டு. சிவம் என்றால் பலரும் பலவிதமான பொருள் கூறுவார்கள். ஆனால் உண்மையான பொருள் நல்லோர்களின் உறைவிடமானவர் என்பதே. சங்கரன் என்றால் மங்களம் தருபவர்என்று பொருளாகும். மூன்று கண்களில் மற்ற இரு கண்களுக்கும் பொருந்தாமல் மேல் நோக்கிய மூன்றாவது கண்ணை உடையவராதலால் விரூபாக்ஷர் என்றும் அழைக்கப்படுவார். சிவ மூர்த்தங்கள் 64 யும் தாண்டி அனேக மூர்த்தங்கள் உள்ளன. அவற்றை அதோமுக மூர்த்தங்கள் என்று குறிப்பிடுவார்கள். பெரும்பாலான மூர்த்தங்கள் ஆலயங்களில் சிற்பங்களாய் வடிக்கப்படாமலும், மக்களால் அறியப்படாமலும் உள்ளன.

இவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் மகா சதாசிவ மூர்த்தி என்கிறோம். அந்த கைலையில் இவரைச் சூழ்ந்தவாறே இருபத்தி ஐந்து மூர்த்திகளும் உள்ளனர். மேலும் இவரைச் சூழ்ந்தவாறு       ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் உள்ளனர். அனைவருமே மகாசதாசிவ மூர்த்தியை வணங்குகின்றனர். இவரை புராணங்கள் கைலாயத்தில் உள்ளவராகச் சொல்கின்றன. மேலும் மகா கைலாயத்தில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களுக்கும் அருள் பாலித்து அனுக்கிரகம் செய்வதால் இவரை அனுக்கிரக மூர்த்தி என்றேக் கொள்ளுதல் வேண்டும். மேலும் இவரை இன்ன உருவம் தான் எனக் கூற முடியாது.  அனைத்தும் கலந்த திருமேனியுடையவர் என புராணங்கள் கூறுகின்றன. இவரை நாம் தரிசிக்க செல்ல வேண்டிய தலம் காஞ்சிபுரமாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இவரை கோயிலுள் காண முடியாது. சுரகரேஸ்வரர் கோயில் விமானத்தில் சுதை சிற்பமாகத்தான் காண முடியும். மேலும் பல கோயில் விமானங்களில் தான் தரிசிக்க முடியும்.
இவரை வணங்கினால் சிவ தரிசனம் விரைவில் கைகூடும்  என்பது ஐதீகம். மேலும் கடுமையான காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் கருப்பஞ்சாறால் இவரை அபிசேகம் செய்தால் கடும் காய்ச்சல் நீங்கி தேகம்   ஆரோக்கியம் பெறும் என்றும் கூறப்படுகிறது.



நன்றி: முகநூல், தினமலர்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக